க.பரமத்தி, டிச.22: “இந்திய மக்கள் வாழ மோடி அரசு வீழ’’ மக்களை சந்தித்து அனைத்து ஒன்றிய, மாநில தொழிற்சங்கங்கள் ஐக்கிய விவசாயிகள் அமைப்பு ஆகியவை இணைந்து கரூர் மாவட்டம் தென்னிலை கடைவீதியில் பிரசார தெருமுனை கூட்டம் நடைபெற்றது. பிரச்சார தெருமுனைக் கூட்டத்திற்கு தொ.மு.ச. பேரவை மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமை வகித்தார். கூட்டத்தில் திமுக நெசவாளர் அணி செயலாளர் பரணிமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கந்தசாமி, செயலாளர் முருகேசன், உதவி செயலாளர் ராஜாமுகமது, ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், செயலாளர் ஆனந்தராஜ், அமைப்பாளர் சுடர்வளவன், அமைப்பின் மாவட்ட தலைவர் தங்கவேல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு தெருமுனை கூட்டம் குறித்து விளக்கி பேசினர். அனைத்து தொழிற்சங்க மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.