கோவை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவரை காப்பாற்றிய போலீசார்

கோவை: கோவை ரயில் நிலையத்திற்கு கண்ணூரில் இருந்து எஸ்வந்த்பூர் செல்லும் ரயில் நேற்று முன்தினம் இரவு வந்தது. இந்த ரயில் நடைமேடை 3-க்கு வந்தபோது ரயிலில் பயணித்த சேலம் மாவட்டம் மேட்டூர் சேர்ந்த சிவக்குமார் இறங்க மறந்து ரயிலில் தூங்கி உள்ளார். திடீரென விழித்து எழுந்தவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்தார். அப்போது அவர் நிலைதடுமாறி நடை மேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்தார். அப்போது அவரை அங்கு பணியில் இருந்த ரயில்வே குற்றப்பிரிவு தலைமை காவலர் ரமேஷ், காவலர் மாரிமுத்து மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் அருண்ஜித், பெண் தலைமை காவலர் மினி ஆகியோர் சேர்ந்து தங்கள் உயிரை பணயம் வைத்து சிவக்குமாரை காப்பாற்றி  கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்