கோவை மதிமுக அலுவலகத்தில்தீரன் சின்னமலை 218-வது நினைவுதினம்

 

கோவை, ஆக. 4: கோவை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 218-வது நினைவுதினம் காந்திபுரம் வி.கே.கே. மேனன் ரோட்டில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ், தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் அ.சேதுபதி, சட்டத்துறை செயலாளர் வக்கீல் சூரி.நந்தகோபால், மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.சற்குணம், சு.தூயமணி, சித்ரா தங்கவேல், பகுதிக்கழக செயலாளர்கள் எஸ்.பி.வெள்ளியங்கிரி, பொ.சு.முருகேசன், எல்.லூயிஸ், மு.ராமநாதன் ச.ப.விசுவராஜ், பொதுக்குழு உறுப்பினர் கே.எம்.ஷாஜகான், மாநகராட்சி கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி, இளைஞர் அணி சிவி தங்கவேல், பழையூர் கிருஷ்ணமூர்த்தி, மாணவர்அணி ம.ராஜிவ்குமார், மகளிர் அணி காந்தாமணி, சின்ன முருகேசன், சி.டி.சி. சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை