சென்னை: கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், கோவை போன்ற சம்பவங்களை தடுப்பது தொடர்பாக வருகின்ற 23ம் தேதி முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….