கோவை எம்.பி. நிதியில் ரூ.8.50 லட்சத்தில் குடிநீர் தொட்டி கட்டும் பணி தொடக்கம்

 

பல்லடம், மே 10: கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சி வலையபாளையத்தில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி பாலசுப்பிரமணியம், ஊராட்சி தலைவர் பிரியங்கா, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சபுரோ ரங்கசாமி, பரமசிவம்,தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை