கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலில் நடந்த மத நல்லிணக்க கூட்டத்தில் ஜமாத் அமைப்பினர்கள் கலந்துகொண்டனர். கோயம்புத்தூர் டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் கடந்த மாதம் 23ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. மதநல்லிணக்கத்தை வலியுறுத்த கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமாத் அமைப்பினர், உலமாக்கள் வருகை புரிந்து, கோயில் பூசாரிகளை சந்தித்து பேசினர். கோயிலுக்கு வந்த ஜமாத் நிர்வாகிகள், உலாமாக்களுக்கு கோயில் பூசாரிகள் வரவேற்று பட்டுத்துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினர்.