கோவையில் ஜூன் 21ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

 

கோவை, ஜூன் 11: கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக் கிழமை நடத்தப்பட்டு வருகிறது.  இந்த மாதத்திற்கான சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமிற்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம்.  பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு பணி காலியிடங்களுக்கு தேர்வு செய்ய உள்ளனர். இதில், கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்