கோவில்பட்டி பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவில்பட்டி, ஆக. 6: கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் பாலு, வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன், போக்குவரத்து காவலர்கள் ராஜாராம், வசந்தி, சமூக ஆர்வலர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய வீடியோக்கள் மற்றும் சாலை விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள், சாலை விதிமுறைகளை பின்பற்றுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ- மாணவிகள் 200 பேருக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடுகளை கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் வழங்கினார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி