கோவில்பட்டி பகுதியில் இன்று மின்தடை

 

கோவில்பட்டி, ஆக.14: கோவில்பட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (14ம் தேதி) மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக பீங்கான் இன்சுலேட்டரை அகற்றிவிட்டு புதிய பாலிமர் இன்சுலேட்டர் மாற்றம் செய்வதற்கும், தொய்வான மின் பாதைகளை சரி செய்வது, புதிய மின் கம்பங்கள் அமைப்பது போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கோவில்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மார்க்கெட் ரோடு உயர் அழுத்த மின் தொடர் மூலம் மின்விநியோகம் செய்யப்படும் வேலாயுதபுரம் பிரிவிற்கு உட்பட்ட ஜெயகுரு அரவை மில், புறவழிச் சாலைப்பகுதி, மூப்பன்பட்டி காலனி, வி.எம்.எஸ். நகர், ஆஞ்சநேயர் கோயில் பகுதி, ஏழாயிரம்பண்ணை சாலை, சூர்யா கார்டன், தனியார் ஸ்டீல் நிறுவனம் ஆகிய பகுதிகளில் இன்று (14ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்து விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து