கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

கோவில்பட்டி,செப்.21: கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளித்தலைவர் மற்றும் செயலர் அய்யனார் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியை வித்யா வரவேற்றார். கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 257 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கி பேசினார். பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ஏஞ்சலா, மாரியம்மாள், முதுகலை ஆசிரியர்கள் பாஸ்கர், அர்ச்சனாதேவி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி