வேளச்சேரி: கோவிலம்பாக்கம், வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (35). இவர், கடந்த அக்டோபர் 21ம் தேதி குடும்பத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாட தனது சொந்த ஊரான கரூருக்கு சென்றார். அங்கிருந்து, நேற்று சென்னை திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 3 சவரன் நகை, 2 செல்போன்கள் மற்றும் 2 கை கடிகாரங்கள் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில், கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்….