கோவிந்தகுடி ஊராட்சியில் 4 தெருக்களுக்கு புதிதாக தார்சாலை: தமிழக அரசுக்கு நன்றி

வலங்கைமான்: வலங்கைமான் அடுத்த கோவிந்தகுடி ஊராட்சியில் நான்கு தெருக்களுக்கு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த கோவிந்தகுடி ஊராட்சி பகுதிகள் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவ்வூராட்சியில் பல்வேறு காலகட்டங்களில் புதிதாக பல நகர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வூராட்சியில் சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடந்த ஆட்சியில் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. அதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தற்போதைய திமுக ஆட்சியில் பல்வேறு பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் தெற்குதெரு, மாஸ் நகர் 1, முத்துநகர், முகமது அலி ஜின்னா தெரு உள்ளிட்ட நான்கு தெருக்களில்ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் கோவிந்தகுடி ஊராட்சி நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்….

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்