Sunday, July 7, 2024
Home » கோவாவுடன் இன்று பலப்பரீட்சை சென்னையின் எப்சி 5வது வெற்றி பெறுமா?

கோவாவுடன் இன்று பலப்பரீட்சை சென்னையின் எப்சி 5வது வெற்றி பெறுமா?

by kannappan

கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 8வது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 52வது லீக் போட்டியில் ஈஸ்ட்பெங்கால்-மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின. பட்டியலில் முதல் இடத்தில் உள்ள வலுவான மும்பைக்கு பெங்கால் கடும் சவால் அளித்தது. இதனால் இறுதிவரை அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டி 0-0 டிராவில் முடிந்தது. இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா-ஒடிசா எப்சி, இரவு 9.30மணிக்கு எப்சி கோவா-சென்னையின் எப்சி அணிகள் மோதுகின்றன. சென்னை 9 போட்டியில் 4ல் வெற்றி, 2 டிரா, 3 தோல்வி என 14 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இன்று 5வது வெற்றிபெறும் முனைப்பில் களம் இறங்குகிறது. கோவா 9 போட்டியில் 2ல் வெற்றி, 3 டிரா, 4 தோல்வி என 9 புள்ளியுடன் 9வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் இதற்கு முன் 19 முறை மோதி உள்ளன. இதில் கோவா 9, சென்னை 8ல் வென்றுள்ளன. 2 போட்டி சமனில் முடிந்துள்ளது….

You may also like

Leave a Comment

5 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi