கோவளம் பண்ணை வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபரீதம் குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்

* செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டல் * கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தில் கைதுசென்னை: கோவளத்தில் உள்ள பண்ணை வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு குளிர்பானத்தில் மதுகலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அவனிடம் இருந்து இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை வியாசர்பாடி சத்யா நகரை சேர்ந்தவர் சந்தோஷ்(19). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சந்தோஷ் நண்பர் ஒருவருக்கு கடந்த வாரம் பிறந்தநாள். இதனால் சந்தோஷ் நண்பர் கோவளத்தில் உள்ள பண்ணை வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து பிறந்தநாள் விழா கொண்டாடினார். பிறந்த நாள் விழாவிற்கு சந்தோஷ் உட்பட தனது நண்பர்கள் இரண்டு பேருடன் தேனாம்பேட்டையை சேர்ந்த பிளஸ் 2 மாணவியான தனது தோழியை அழைத்து ெசன்றுள்ளார்.பண்ணை வீட்டில் நண்பரின் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடிய பிறகு, நண்பர்கள் இருவரும் கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ஓட்ட சென்று விட்டனர். அப்போது சந்தோசும் அவரது தோழியும் தனியாக இருந்துள்ளனர். வெகு நேரம் இருவரும் பேசி கொண்டிருந்தனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட சந்தோஷ், குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்துள்ளார். மாணவி குளிர்பானம் என்று நினைத்து மதுபானத்தை அதிகளவில் குடித்துள்ளார். இதில் போதை தலைக்கேறி மாணவி தள்ளாடி உள்ளார். அப்போது சந்தோஷ் பண்ணை வீட்டில் உள்ள படுக்கை அறைக்கு அழைத்து ெசன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு மாணவிக்கு போதை தெளிந்த உடன் இதுகுறித்து வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்றும், இருவரும் ஒன்றாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு உன் வாழ்க்கையை அழித்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். பிறகு மாணவியை சந்தோஷ் தோனம்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் அருகே இரவு விட்டுவிட்டு சென்றுள்ளார். வீட்டில் இருந்து காலையில் வெளியே சென்ற மகள் இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்ததால், அவரது தாய் எங்கே ெசன்று வருகிறாய் என்றும், ஏன் மிகவும் சேர்வுடன் இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். அப்போது மாணவி அழுதப்படி நடந்த சம்பவத்தை அவரது தாயிடம் கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய். உடனே சந்தோஷ் குறித்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் சந்தோஷை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பிறந்த நாள் விழாவில் குளிபானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து, போலீசார் கல்லூரி மாணவன் சந்தோஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், மாணவியுடன் ஒன்றாக இருந்த போது செல்போனில் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மாணவியை கோவளத்திற்கு அழைத்து செல்ல உடந்தையாக இருந்து இரண்டு கல்லூரி மாணவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

கன்னியாகுமரியில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொலை

சென்னை மதுபோதையில் ஆட்டோ ஒட்டி விபத்து ஏற்படுத்திய 2 பேர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது