கோழிக்கடை உரிமையாளரை வெட்ட முயற்சி

தூத்துக்குடி,ஜூலை 17: தூத்துக்குடி நடராஜபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் மகன் ரமேஷ் (29). இவர், கோழிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், தூத்துக்குடி அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்த தனபாண்டி மகன் செல்வகணேஷ் (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.நேற்று முன்தினம் ரமேஷ் தனது பைக்கில் வி.எம்.கோவில் தெருவில் உள்ள மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றனர். இவர்களிடம் இருந்து ரமேஷ் தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து ரமேஷ் வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து செல்வகணேசை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி