கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஏப்.6: தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்ட பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் அனைத்திற்கும் உரிய தொகையை வட்டி இழப்பின்றி அனைத்து சங்கங்களுக்கும் வரவுவைக்கப்பட்டு சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டும்.விவசாய உபகரணங்கள், வாகனங்கள் வாங்குதல், கட்டிடம் கட்டுதல் போன்றவைகள் தேவையின் அடிப்படையிலும் உண்மையான பயன் உள்ளது என்பதையும் உறுதி செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். அதிகாரிகள் வற்புறுத்தலின் பேரில் பல லட்சங்கள் முதலீடு செய்வது தவிர்க்கப்பட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் மாவட்ட துணைத் தலைவர் செல்வம் நன்றி கூறினார்.

Related posts

அதிக ஒளி பாய்ச்சி மீன் பிடித்த 4 படகுகளின் மின் விளக்குகள் பறிமுதல்

வள்ளியம்மன் கோயில் பொங்கல் விழா பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

மருத்துவத் துறையில் பணி வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்