கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஏப். 4: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை வேளாண்மைத் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலத்தில் பணியாற்றிய சண்முகவேல் மன அழுத்தத்தால் பணியின் போது இறந்தார். அவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் எனக்கோரி நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்புநர் சங்கம் மாவட்ட தலைவர் பரமசிவம், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம், மாநில பொருளாளர் தமிழ்,
தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் தலைவர் முத்துவேல், தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் பணியாளர் சங்க மாநில செயலாளர் கல்பனா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா, தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் பணியாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கருவூலகத்துறை அலுவலகம் முன்பும் நடந்தது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை