பல்லடம், அக்.17: கோவை மாவட்டம், செஞ்சேரிமலையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (50). இவர் நேற்று முன்தினம் பல்லடம் அருகே பொங்கலூர் ஒன்றியம் கோவில்பாளையத்தில் உள்ள ராமசாமி கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். இவரது வேனை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு கோயிலுக்கு சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வேனை காணவில்லை. இதுகுறித்து சதீஷ்குமார் அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரை பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது வேனை ஒருவர் திருடிக் கொண்டு செல்வது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.