கோயில் பூட்டை உடைத்து திருட்டு

 

கோவை, மே 10: கோவை குறிச்சி வெங்கடசாமி லே அவுட்டில் மங்கள விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பூசாரி வழக்கம்போல் பூஜை செய்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை கோயிலுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கோயிலில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பித்தளை மற்றும் வெண்கல சாமி பொருட்கள் திருடப்பட்டிருந்தது. நள்ளிரவில் பூட்டை உடைத்து கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் இந்த பொருட்களை திருடி சென்றுவிட்டதாக தெரிகிறது. இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு