கோயில் பிரச்னை தொடர்பாக சாலை மறியலால் பதட்டம்

காரைக்குடி, ஏப்.17: காரைக்குடி அருகே வேலங்குடியில் உள்ள கோயில் தொடர்பாக கடந்த சில மாதங்களாக பிரச்னை இருந்து வருகிறது. கோவில் விழாவை வழக்கமான முறையில் பாரம்பரிய முறைப்படி நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 15 ஊரை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று 14 ஊரை சேர்ந்த திரளான மக்கள் பள்ளத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் திடீர் என பள்ளத்தூர் திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டது.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து