கோயிலுக்குள் சினிமா பாடலுக்கு நடனம்: பெண் மீது வழக்குப்பதிவு

போபால்: மத்திய பிரதேசம் உஜ்ஜைனி மாவட்டத்தில் மகாகளிஸ்வர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். இந்த கோயிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ற மனீஷா என்ற பெண் கோயிலில் பாலிவுட் சினிமா பாடலுக்கு நடமாடியுள்ளார். மேலும் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கினர். இதை பார்த்த, பலர் கோயிலுக்குள் சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய மனீஷாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பெண்ணும் மன்னிப்பு கோரினார். இந்நிலையில், மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவின் உத்தரவின் பேரில், ‘விதிமுறை மீறி கோயிலுக்குள் டான்ஸ் ஆடியதாக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்’….

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நெய் விநியோகித்த திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் போலீசில் புகார்

சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த யூடியூபர் மீது வழக்கு: தெலங்கானா போலீஸ் அதிரடி

திருப்பதியில் இயக்க சாத்தியமில்லாததால் ரூ.2.30 கோடிக்கு வாங்கிய டபுள் டக்கர் பஸ் முடக்கம்: செகண்ட் ஹேண்ட் விற்பனைக்கும் ஆள் இல்லை