கோயிலில் திருட்டு

நெல்லை, மே 8: திசையன்விளை முடன்குளத்தில் உள்ள காமாட்சி அம்மன், சுடலை மாடன் கோயிலில் கடந்த ஏப். 30ம் தேதி பூஜைகள் நடந்தன. கடந்த மே 5ம் தேதி சிறப்பு பூஜைகள் நடத்தும்பொருட்டு திசையன்விளையைச் சேர்ந்த சுடலை (65) என்ற பூசாரி கோயிலுக்கு சென்றபோது கோயில் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு பதறினார்.

உள்ளே சென்றபோது அங்கிருந்த சிசிடிவி கேமரா, ஹார்டிஸ்க், இன்வெர்ட்டர், பேட்டரி, சில்வர் பாத்திரங்கள் உள்பட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து திசையன்விளை போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்