கோயிலில் சிறப்பு பூஜை

சேலம், ஜூன் 20: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் 54வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் மாநகர், மாவட்ட காங்கிரஸ் சார்பில், சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ராகுல்காந்தி பெயரில் சிறப்பு பூஜை நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. பின்னர் அன்னதானப்பட்டி நடுநிலைப்பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளுக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். பொருளாளர் தாரை ராஜகணபதி, நிர்வாகிகள் முருகன், கிருஷ்ணசாமி, ஷானவாஸ், மெடிக்கல் பிரபு, பச்சைப்பட்டி பழனி, கோபிகுமரன், சாதிக் பாட்சா, குமரேசன், சாந்தமூர்த்தி, நிசார், கார்த்தி, மொட்டையாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்