விருத்தாசலம், பிப். 6: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் திரவுபதி அம்மன், மாரியம்மன், வீரன் கோயில் என தனித்தனியாக மூன்று கோயில்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் நேற்று காலை இக்கோயில்களின் கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கம்மாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்யராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் கம்மாபுரம் போலீசார் விசாரணை நடத்தியதில் திரவுபதி அம்மன் கோயிலில் அம்மன் சிலையில் இருந்த இரண்டு பவுன் தாலி மற்றும் 3 கோயில்களிலும் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள காணிக்கை பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில்களின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கம்மாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயிலில் அம்மன் தாலி, ₹10 ஆயிரம் கொள்ளை
previous post