அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் நாளை வழக்கம்போல் செயல்படும் என கோயம்பேடு வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இச்சமயத்தில் மக்களுக்கு காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்கள் சீராக கிடைப்பதற்கு தமிழக அரசு சார்பில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் மக்களுக்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்களின் விற்பனை நடைபெற்று வருகிறது.இதுகுறித்து கோயம்பேடு மொத்த வியாபாரிகளின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் கூறுகையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தமிழக அரசு அறிவித்த கொரோனா தடுப்பு விதிகளை நாங்கள் முறையாக கடைப்பிடித்து வருகிறோம். இதையடுத்து, சென்னை நகரில் காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த, கோயம்பேடு மார்க்கெட் நாளை வழக்கம்போல் இயங்கும் என தெரிவித்தார்….