சென்னை: தமிழகம் , கர்நாடக , மகாராஷ்ரா, ஆந்திரா , மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 450 முதல் 500 வாகனங்களில் காய்கறிகள் வருவது வழக்கம். ஆனால் நேற்று காலை 600 வாகனங்களில் சுமார் 6,500 டன் காய்கறிகள் வந்து குவிந்தன. இதன்காரணமாக, ஒரு கிலோ ரூ.25க்கு விற்ற நவீன தக்காளி நேற்று ரூ.8க்கு விற்றது. ரூ.20க்கு விற்ற ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.7க்கும் ரூ.34க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் ரூ.20க்கும், ரூ.35க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.20க்கும், ரூ.80க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ ஊட்டி கேரட் ரூ.70 க்கும், முள்ளங்கி ரூ.9ல் இருந்து ரூ.6க்கும், பீன்ஸ் ரூ.20 ல் இருந்து ரூ.15க்கும் சுரக்காய் ரூ.10ல் இருந்து ரூ.6க்கும், முட்டைகோஸ் ரூ.10ல் இருந்து ரூ.8 க்கும், பாவக்காய் ரூ.18 ல் இருந்து ரூ.15க்கும், சவ்சவ் ரூ.8ல் இருந்து ரூ.5க்கும், வெண்டைக்காய் ரூ.25 ல் இருந்து ரூ.20க்கும், வரி கத்திரிக்காய் ரூ.12 ல் இருந்து ரூ.10க்கும், உஜாலா கத்திரிக்காய் ரூ.20ல் இருந்து ரூ.15க்கும், சேனைக்கிழங்கு ரூ.15ல் இருந்து ரூ.14 க்கும், முருங்கைகாய் ரூ.60ல் இருந்து ரூ.50க்கும் , சேமகிழங்கு ரூ.20ல் இருந்து ரூ.15 க்கும் , காலிபிளவர் ரூ.12ல் இருந்து ரூ.10க்கும் , விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து, கோயம்பேடு சிறு, மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்.எஸ் .முத்துகுமார் கூறுகையில் ‘‘மார்க்கெட்டுக்கு ஒரு நாளைக்கு 450ல் இருந்து 500 லாரிகளில் காய்கறிகள் வருகிறது. நேற்று காலை 600 லாரிகளில் காய்கறிகள் வந்துள்ளன. 100 வாகனங்கள் கூடுதலாக வந்துள்ளதால், காய்கறிகளின் விலை தொடர்ந்து குறைந்துள்ளது. வியாபாரிகள் கடும் கவலையில் உள்ளனர். காய்கறி விலை தொடர்ந்து குறைந்து வருவதால், விவசாயிகளும் உரிய விலை கிடைக்காமல் வேதனையில் உள்ளனர்….