கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொழிலாளிக்கு சரமாரி வெட்டு

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விஸ்வநாதன் (42), கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தபோது, அங்கு வந்த 4 பேர், மது அருந்த பணம் கேட்டுள்ளனர். இவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த 4 பேரும், கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சீனு (எ) சீனிவாசன் (38), ஆவடியை சேர்ந்த கோட்டை (எ) கணேசன் (42) ஆகியோரை கைது செய்தனர். தப்பிய இருவரை தேடி வருகின்றனர்….

Related posts

தக்கலையில் காருக்கு வழிவிடாததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் கோழிப்பண்ணை உரிமையாளர் வீட்டை சூறையாடிய கும்பல்

தமிழகம் முழுவதும் 53 பேரை ஏமாற்றி திருமணம் `சத்யாவை நம்பி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தேன்’

கும்பகோணத்தில் பயங்கரம் மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவர்