கோபி அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு பால், ரொட்டி வழங்கல்

 

கோபி, நவ.26: ஈரோடு வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள உள்நோயாளிகள் 200க்கும் மேற்பட்டோருக்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பால், ரொட்டி, முட்டை உள்ளிட்டவைகளை ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் வழங்கினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள 200க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு பால், ரொட்டி, முட்டை, பேரீட்சை, வாழைப்பழம் என சத்தான உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்றது.

ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவேங்கடம் தலைமையில் கோபி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரேணுகா ரஞ்சன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், கோபி நகர திமுக செயலாளரும் கோபி நகராட்சி தலைவருமான என்.ஆர்.நாகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நோயாளிகளுக்கு உணவு பொருட்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் கோபி நகர இளைஞரணி அமைப்பாளரும், திட்ட குழு உறுப்பினரும், நகராட்சி கவுன்சிலருமான விஜய் கருப்புசாமி, லக்கம்பட்டி நாச்சிமுத்து, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வினோத்குமார், வைத்தீஸ்வரன், நாய்க்கன்காடு ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து உள்நோயாளிகள் அனைவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பால், ரொட்டி, முட்டை உள்ளிட்ட பொருட்கள் ஒவ்வொரு வார்டாக சென்று வழங்கப்பட்டது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை