கோத்தகிரி, ஜூன்.20: கோத்தகிரி அருகே கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோத்தகிரி அருகே உள்ளது கூக்கல் கிராமம். இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும், கூக்கல் கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் இங்கு சிறுத்தை, கரடி, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.