கோத்தகிரியில் பகல் நேரங்களில் உலா வந்த கரடி

 

கோத்தகிரி, ஜூலை 13: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு தேடி கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் அதிக மக்கள் வசிக்கும் பகுதியான கார்சிலி பகுதியில் கரடி பகல் நேரத்தில் சர்வ சாதாரணமாக உலா வரத் தொடங்கி உள்ளது. கடந்த வாரத்தில் இரவு நேரங்களில் உலா வரத்தொடங்கிய கரடி தற்போது பகல் நேரத்தில் பிரதான சாலையில் உலா வரத்தொடங்கி உள்ளது.

நீண்ட நேரம் சாலையில் உலா வந்து பின்னர் தேயிலை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. இதனால் தேயிலை தோட்டங்களில் பணிக்கு செல்ல தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அதிக மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் பகல் நேரத்தில் உலா வரும் கரடியை வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை