கோட்டை மாரியம்மன் கோயில் அன்னதான உண்டியலில் ₹1.09 லட்சம் காணிக்கை

சேலம், செப்.24:சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த அன்னதான உண்டியலில் ₹1.09 லட்சம் காணிக்கை இருந்தது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டையொட்டி கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் நிரந்தர உண்டியல்கள் 5 உள்ளன. இதைதவிர அன்னதான உண்டியல் என்று ஒன்று வைக்கப்பட்டது. இந்த உண்டியல் ஒவ்வொரு மாதமும் திறந்து காணிக்கை எண்ணப்படும். அதன்படி, நேற்று கோயில் அறங்காவலர்குழு தலைவர் சக்திவேல், கோயில் செயல்அலுவலர் அமுதசுரபி முன்னிலையில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. அதில் ₹1 லட்சத்து 9 ஆயிரத்து 668 இருந்தது. இந்த உண்டியல் காணிக்கை கோயிலில் வழங்கப்படும் அன்னதான திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்