கோடை விழாவையொட்டி கொடைக்கானல் ஏரியில் படகு போட்டி: சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி நடந்த படகு போட்டிகளில், சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 24ம் தேதி தொடங்கிய கோடை விழா, நாளையுடன் முடிவடைகிறது. இதையொட்டி, கொடைக்கானல் ஏரியில் நேற்று படகு போட்டி நடந்தது. இப்போட்டி மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன. பெடல் படகு பிரிவில் இரட்டையர் பெடல் போட்டி, நால்வர் பெடல் போட்டிகள் நடந்தன. இதில், 60 பேர் கலந்து கொண்டனர். இரட்டையர் பெடல் போட்டியில் மயிலாடுதுறை ஜீவிகா, ரமேஷ் முதலிடத்தையும், திருவாரூர் செல்வி, உதயா இரண்டாம் இடத்தையும், புவனேஸ்வரி, சந்தோஷ்குமார் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.நால்வர் பெடல் போட்டியில் கொடைக்கானல் ரித்திக், உதயா, சாந்தம்மாள், செல்வி குழுவினர் முதல் பரிசையும், தென்காசி ஐயன் கண்ணு, அபி, சஞ்சீவ் ராவ், மணிகண்டன் குழுவினர் இரண்டாவது பரிசையும், முத்துக்குமார், முத்துராமன், யுவராஜ், சுவாதி குழுவினர் மூன்றாவது பரிசையும் வென்றனர்.பின்னர் நடந்த துடுப்பு படகு போட்டியில் வனபாண்டி முதலிடத்தையும், தாவூத் இப்ராஹீம் இரண்டாவது இடத்தையும், பெலிக்ஸ் ராஜ்குமார் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இதையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவராஜ் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினார். கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை சுற்றுலாத்துறையினர் செய்திருந்தனர்….

Related posts

பிரேக் பழுது காரணமாக பல்லவன் விரைவு ரயில் பாதிவழியில் நிறுத்தம்

மக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியது மன நிறைவு தருகிறது: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு

ஒசூரில் அமையவிருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மூலமாக ஐபோன் தயாரிக்கும் ஆலை மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தகவல்