கோடை விழாவின் ஒரு பகுதியாக ஊட்டியில் துவங்கியது குதிரை பந்தயம்

*சுற்றுலா பயணிகள் உற்சாகம்ஊட்டி :  கோடை விழாவின் ஒரு பகுதியாக மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டியில் 135வது குதிரை பந்தயம் நேற்று துவங்கியது.  நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை சீசன் சமயத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான 135வது குதிரை பந்தயம் நேற்று துவங்கியது. ஜூன் மாதம் வரை இந்த குதிரை பந்தயம் நடக்கவுள்ளது. இதற்காக பெங்களூர், சென்னை, பூனே உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 600 பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 30 குதிரை பயிற்சியாளர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட ஜாக்கிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.  ஊட்டியில் நேற்று குதிரை பந்தயம் துவங்கிய நிலையில், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பலரும் ஆர்வமுடன் இந்த பந்தயத்தில் கலந்துக் கொண்டு விளையாடினர். முதல் நாளான நேற்று 6 போட்டிகள் நடந்தது. இதில் முதலிடம் பிடித்த குதிரைகளின் உரிமையாளர்கள், ஜாக்கிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஊட்டியில் துவங்கியுள்ள குதிரை பந்தயத்தில் முக்கிய போட்டிகளான ‘தி நீல்கிரிஸ் 1000 கீனிஸ்’ கிரேட் 3 போட்டி வரும் 30ம் தேதியும், ‘தி நீல்கிரிஸ் 2000 கீனிஸ்’ கிரேட் 2 போட்டி மே 1ம் தேதியும், ‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்’ கிரேட் 1 போட்டிகள் மே மாதம் 15ம் தேதி நடக்கிறது. இது தவிர ஊட்டியில் நடக்கும் முக்கிய போட்டியான ‘நீலகிரி தங்க கோப்பை’ போட்டி ஜூன் மாதம் 2ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது….

Related posts

புதுவண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது தகரம் விழுந்து 3 பேர் காயம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை