கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 வாலிபர்கள் கைது

ஓசூர், ஜூலை 2: ஓசூர் அருகே வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பழைய ஆனேக்கல் சாலை கர்னூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில், நேற்று முன்தினம் மத்திகிரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிக்கொண்டிருந்த நபர்களிடம் சோதனையிட்டபோது, ஆயுதங்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர்கள் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியதாக, ஓசூர் அந்திவாடி பகுதியைச் சேர்ந்த ஹேமந்த்(20), மதுபாலன்(19), மிடிகிரிப்பள்ளி வினோத்(26), அந்திவாடி மனோஜ்(19), சின்ன மேனகரம் அசோக்(29) ஆகிய 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை