கொள்ளிடம் அருகே போலியான மின்சார மீட்டர் பொருத்தி பணம் வசூல்-மர்ம நபருக்கு வலைவீச்சு

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே மின்சார வாரிய ஊழியர் என்று சொல்லி போலியான மீட்டர் பொருத்தி பணம் வசூல் செய்து மின் இணைப்பு கொடுத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள தைக்கால் கிராமம் ஜாகிர்உசேன் தெருவைச் சேர்ந்த அப்துல்உசேன் என்பவரின் மனைவி உம்மர்கனி(30) என்பவரின் வீட்டில் மின் இணைப்பு இல்லாததால் அதற்குரிய வயரிங் பணியை செய்து முடித்துவிட்டு மின் இணைப்பு வேண்டி கொள்ளிடம் மின்சார வாரிய அலுவலகத்துக்கு அதற்குரிய கட்டணத் தொகை செலுத்தாமல் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார்.இந்நிலையில் கடந்த 17ம் தேதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒரு மர்மநபர் உம்மர்கனி வீட்டிற்கு வந்து மின்சார வாரிய ஊழியர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மின் இணைப்பு கொடுக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதனை நம்பிய உம்மர்கனி மின் இணைப்பு கொடுக்க சம்மதித்தார். உடனே அந்த நபர் ஒரு புதிய மீட்டர் கம்பத்தில் ஏறி மின் இணைப்பையும் வழங்கினார். அதில் ஆர்.எஸ்,எஸ் சி1445 என்றும், 17.2.22 என்ற தேதியையும் குறிப்பிட்டார். பின்னர் மின் இணைப்புக்கான கட்டணம் ரூ.3920ஐ உம்மர்கனியிடமிருந்து ரொக்கமாக கேட்டு வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். இந்நிலையில் இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சீர்காழி மின் வாரிய உதவி செயற்பொறியாளர்(வடக்கு) விசுவநாதன் உத்தரவின்பேரில் கொள்ளிடம் மின்வாரியஉதவி பொறியாளர் மாரிமுத்து, வருவாய் மேற்பார்வையாளர் மணி, கணக்கீட்டு ஆய்வாளர் திருலோகச்சந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று தைக்காலில் உள்ள உம்மர்கனி வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்து பார்த்ததில் போலியாக ஒரு மர்ம நபர் வந்து மின்சார வாரிய ஊழியர் என்று கூறி மின்இணைப்பு கொடுத்தது தெரியவந்தது. உடனே அதிகாரிகள், மர்ம நபர் கொடுத்திருந்தமின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் இதுகுறித்து கொள்ளிடம் மின்சார வாரிய உதவி பொறியாளர் மாரிமுத்து கொள்ளிடம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது