Friday, July 5, 2024
Home » கொள்ளிடம் அருகே அரசூர் பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல வேண்டும்

கொள்ளிடம் அருகே அரசூர் பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல வேண்டும்

by Suresh

கொள்ளிடம்,ஆக.30: கொள்ளிடம் அருகே அரசூர் பேருந்து நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசூரில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு தொகுதி நிதியிலிருந்து புதிதாக பேருந்து நிறுத்த கட்டிடம் கட்டப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் அந்த பஸ் நிறுத்தத்தில் எந்த பேருந்தும் நிற்காமல் சென்று கொண்டு இருக்கின்றன.

அரசு போக்குவரத்து கழக டவுன் பஸ்சும் நிற்காமல் செல்கின்றன. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மணலகரம், காப்பியக்குடி, பட்டவிளாகம், ஓலையம்புத்தூர், தில்லைவிடங்கன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சீர்காழி, கொள்ளிடம், புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொழிலாளர்கள் உள்ளிட்டோரும் உரிய நேரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று சேர முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

இது குறித்து ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஞானப்புகழேந்தி கூறுகையில், அரசூர் கிராமத்தில் பழைய பேருந்து நிறுத்தம் இருந்த இடத்தில் உள்ள பேருந்து நிழற்குடையை அகற்றிவிட்டு அப்பகுதியில் மயிலாடுதுறை எம்பி நிதியின் கீழ் புதிய பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டு எந்தப் பயன்பாடும் இல்லாமல் காட்சி பொருளாகவே விளங்கி வருகிறது. மேலும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக புதியதாக பேருந்து நிறுத்த கட்டிடம் அரசின் சார்பில் கட்டிக் கொடுத்தும், அங்கு எந்த பஸ்சும் நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது. அரசு போக்குவரத்து கழக டவுன் பஸ் கூட அங்கு நிற்கிறது. தனியார் பேருந்துகளும் நிற்காமல் சென்று கொண்டு இருக்கின்றன. அங்கு வந்து காத்திருப்பவர்கள் ஏமாந்து செல்கின்றனர். வயது முதிர்ந்த ஆண்கள், பெண்கள், உள்ளிட்டோரும் சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு இங்கு நீண்ட நேரம் காத்திருந்து பஸ் நின்று செல்லாததால் மீண்டும் வீடுக்கு திரும்பி செல்லும் நிலைஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே அப்பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதியதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பஸ்களையும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

9 + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi