கொளத்தூர் கிராமங்களில் பரவும் மர்ம காய்ச்சல்

மேட்டூர்: சேலம் மாவட்டம், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாலவாடி, வெடிகாரனூர் மற்றும் காவேரிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் பரவி வருகிறது. பாலவாடியைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மேட்டூர் பகுதியிலும் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அரசு மருத்துவமனைக்கு மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும், காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, சுகாதாரத் துறையினர் காய்ச்சல் பரவாமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாலவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை