கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடையில் 25 பாக்கெட் புகையிலை பறிமுதல்

நித்திரவிளை, செப்.21: கொல்லங்கோடு காவல்நிலைய எஸ்.ஐ. ஜாண்றோஸ் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்கவிளை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அடைக்காகுழி நெடும்பழஞ்சி பகுதியை சேர்ந்த ராஜன் (73) என்பவரை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 25 பாக்கெட் குட்கா புகையிலையை பறிமுதல் செய்தனர். இது குறித்து கொல்லங்கோடு போலீசார் ராஜன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி