கொல்லங்குளத்தில் ரூ.8 லட்சத்தில் புதிய ரேஷன்கடை திறப்பு

ஆலங்குளம், ஜூலை 12: ஆலங்குளம் அருகே கொல்லங்குளம் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடையை மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ திறந்து வைத்தார். ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சான் பஞ்சாயத்துக்குட்பட்ட கொல்லங்குளம் கிராம மக்கள் தங்களது ஊருக்கு புதிய ரேசன் அமைத்து தர வேண்டும் என்று மனோஜ் பாண்டியன் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து ரேசன் கடை கட்டி முடிக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் சேர்மதுரை. ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் கண்ணன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் நவராஜ் சாலமோன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பேசினார். விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணியை அதிகாரிகள் ஆய்வு

போதை மாத்திரை விற்ற ரவுடி மீது குண்டாஸ்

கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை நிலுவையின்றி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை