கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

மேட்டூர், மே 14: மேட்டூர் மாதையன்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சாமிதுரை(50). கூலி தொழிலாளியான இவர், கடந்த 19ம் தேதி வேடனூர் கோயில் அருகில் உள்ள தோட்டத்தில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மேட்டூர் பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவர், கொடுவாள் கேட்டுள்ளார். ஆனால், கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தி அருகில் இருந்த கட்டையால் சரமாரி தாக்கி சாமிதுரைக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில், மேட்டூர் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர். பின்னர், மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையிலடைத்தனர்.

Related posts

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம்

மகளிர் சுய உதவிக்குழு, குழுக்கூட்டமைப்புகள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

அமையபுரம் ஊராட்சியில் குவாரி உரிமத்தை ரத்து செய்யுங்கள்