டெல்லி : கொரோனா 3வது அலை குறித்த எச்சரிக்கையை வானிலை அறிக்கை போல கருத வேண்டாம் என்று கொரோனா தடுப்புப் பிரிவின் தலைவரும் நிதி ஆயோக் உறுப்பினருமான டாக்டர் .வி.கே.பால் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. இதனால் கொரோனா வழிமுறைகளை பின்பற்றாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பெரும் திரளாகக் கூடுவதும் சுற்றுலா செல்வதும் 3வது அலை தொடக்கத்துக்கும் காரணமாக இருக்குமோ என்ற அச்சம் பரவலாக எழுகிறது.
இது இந்தியாவுக்குள் பரவாமல் இருக்க மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.நமது பொறுப்பற்ற செயல்களால் தான் 3வது அலை உருவாகி பரவும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனா 3வது அலையை இந்தியாவில் தாக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,’என்றும் டாக்டர் வி.கே.பால் சுட்டிக் காட்டியுள்ளார். …