கொரோனா 3வது அலையின் உச்சம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இருக்கலாம்: ஒன்றிய அரசு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை

டெல்லி: கொரோனா 3வது அலையின் உச்சம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இருக்கலாம் என்று ஒன்றிய அரசு ஆராய்ச்சியாளர் மனிந்திர அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2வது அலையின்போது ஏற்பட்ட பாதிப்பில் பாதியாவது 3வது அலையில் ஏற்படும். ஆகஸ்ட் மாதமே 3வது அலை பரவத் தொடங்கும் என்பதால் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். புதிய உருமாறிய கொரோனா தொற்றால் மூன்றாவது அலை உருவானால் அக்டோபர் நவம்பரில் உச்சநிலையை அடையும் என்றும், அது இரண்டாம் அலையின் உச்சநிலையைவிடப் பாதியாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய அரசின் வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ள மணீந்திர அகர்வால் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் மூன்றாம் அலை உருவாக வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இப்போதுள்ளதைவிட 25 விழுக்காடு அதிகப் பரவல் வேகம் கொண்ட புதிய தொற்று ஆகஸ்டில் பரவத் தொடங்கினால் அக்டோபர் நவம்பரில் உச்சநிலையை எட்டும் என்றும், இரண்டாம் அலையின் உச்சத்தைவிடப் பாதியாக ஒருநாளில் ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரை பாதிப்பு இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மூன்றாவது அலையின்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்றும் மற்றொரு வல்லுநரான வித்யாசாகர் தெரிவித்துள்ளார்….

Related posts

பாலியல் புகாரை விசாரிக்க நடிகை ரோகிணி தலைமையில் குழு பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம்

மாஜி துணை பிரதமர் தேவிலால் பேரன் பாஜவில் இருந்து விலகல்

நக்சலைட்டுகளை ஒழிக்க சட்டீஸ்கரில் 4,000 சிஆர்பிஎப் வீரர்கள் குவிப்பு: பாதுகாப்பு படை அதிகாரிகள் தகவல்