புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றின் காரணமாக புதிதாக 13,405 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4,28,51,929 ஆக அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான ஒரு நாளில் புதிதாக 235 உயிரிழப்புகள் ஏற்பட்டத்தை அடுத்து மொத்த இறப்புக்கள் எண்ணிக்கையானது 5,12,344 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையானது 1,81,075 ஆக குறைந்துள்ளது. குணமடைவோர் சதவீதம் 98.38 ஆக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு 1.24 சதவீதமாக உள்ளது. 16வது நாளாக தொற்று பாதிப்பு ஒரு லட்சத்துக்குள் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 175.83 கோடி கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது எனவும் ஒன்றிய சுகாதார அமைச்சத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது….