கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

சென்னை: கொரோனா பாதிப்பு நிலவரங்களை  கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தொற்று அதிகமாக இருந்த சென்னையிலும் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோன தடுப்பு நடவடிக்கையாக 13 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை ஆய்வு செய்து அவ்வப்போது தேவையான அறிவுரைகளை தமிழக அரசுக்கு வழங்குவது தொடர்பாக கொரோனா பாதிப்புகளை ஆய்வு செய்யக்கூடிய வகையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் இல்லாத மருத்துவர்கள் 4 பேரும், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனர் உட்பட 9 பேரும் இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 
இந்த குழுவில் அரசு அலுவலக இல்லாத மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதில் சுகானந்தம், குழந்தைசாமி, மனோஜ் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த குழுவை பொறுத்தவரையில் அரசுக்கு ஆலோசனை வழங்குவதுடன் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி கொரோனா வைரஸ் தொற்றை  கட்டுப்படுத்துவது குறித்து கண்காணித்து அரசுக்கு தேவையான தகவல்களை தெரிவிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு குழு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழிக அரசிற்கு பரிந்துரைகளையும் வழங்கும். தேவைக்கு ஏற்ப இந்த குழுவின் உறுப்பினர்களை அதிகரித்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டிருக்கிறது.

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி