கொரோனா பாதித்தவரை ஆக்சிஜன் முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்த வைகோ மகன்!: பொதுமக்கள் பாராட்டு..!!

விருதுநகர்: ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் விழிப்புணர்வு முகாமை பார்வையிட சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ, கொரோனா நோயாளியை மருத்துவமனையில் சேர்த்து சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. டாக்டர் ரகுராமன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 
இந்த முகாமில் இலவசமாக அம்புலன்ஸ் சேவை, ஆக்சிஜன் சிலிண்டருடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமை பார்வையிட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ மற்றும் எம்.எல்.ஏ. டாக்டர் ரகுராமன் சென்றனர். அப்போது அய்யனாபுரம் திமுக கிளை செயலாளர் அடைக்கலம் என்பவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. 
உடனடியாக துரை வைகோ மற்றும் டாக்டர் ரகுராமன் எம்.எல்.ஏ. இருவரும் பாதுகாப்பு கவச உடை அணிந்து பாதிக்கப்பட்டவரை ஆம்புலன்சில் ஏற்றி ஆக்சிஜனுடன் முதலுதவி செய்து அந்த ஆம்புலன்ஸிலேயே கொண்டு போய் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொரோனா நோயாளியை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தது மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது. 

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 13ம் நூற்றாண்டு கால கல்வெட்டு கண்டெடுப்பு

சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் மோதல்: 3 பேர் கைது

சிவகாசியில் 98 பட்டாசு ஆலைகளுக்கு அபராதம்