சென்னை: இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் சூழல் காணப்படுவதாக தலைமை செயலாளர் கூறியுள்ளார். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த தோற்று அதிவேகமாகவும், பன்மடங்காகவும் அதிகரித்துவருகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த நோய் பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பன்முக நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். …