கொரோனா பணிகளுக்கு நன்கொடை வழங்கி வருபவர்களுக்கு முதல்வர் நன்றி

சென்னை: கொரோனா சிகிச்சை பணிகளுக்காக நன்கொடை வழங்கி வரும் நன்கொடையாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கொரோனா சிகிச்சைப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வரும் நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி. நன்கொடை-செலவினங்கள் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. இச்செயல் தொடரும். விரைவில் தமிழகம் மீளும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை