கொரோனா நோயால் மரணமடைந்த அனைவருக்கும் இழப்பீடு தர உத்தரவிட முடியாது: ஐகோர்ட் கருத்து

சென்னை:  கோவையை சேர்ந்த பூமிராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடர்ந்திருந்தார். ஒரு மனுவில், கொரோனா நோய் தாக்கி இறந்தவர்களின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்ய நிவாரணம் வழங்க வேண்டும். வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பெற்றோர் இல்லாத குழந்தைகளின் நலன் காக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். மற்றொரு மனுவில், கோவை சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா பரவல் குறையாததால் அங்கு அரசு சிறப்பு கவனம் செலுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த இரு வழக்குகளும் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவு தொடர்பான விவகாரங்களை எதிர்த்து தொடரப்படும் பெரும்பாலும் பொதுநல வழக்குகள் விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்படுகிறது. நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும். அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவை நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம். கோவை உள்ளிட்ட பல பகுதிகளிலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஒருவேளை நடவடிக்கை தேவைப்பட்டால், நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள வழக்கில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டு இரு வழக்குகளையும் முடித்து வைத்தனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்