சென்னை: கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வழங்கியதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்குவோம். கடைக்கோடி வரையில் தடுப்பூசிகளை கொண்டுச் செல்ல அனைத்தும் தயார் நிலையில் உள்ளது எனவும் கூறினார். …