* முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதி இல்லை* 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து பயணிகள் பயணம்வேலூர் : வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 49 நாட்களுக்கு பிறகு அரசு பஸ் போக்குவரத்து நேற்று தொடங்கியது. 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து பயணிகள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தீவிரம் காரணமாக தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தொற்று குறைய தொடங்கியதால், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநில எல்லைக்குள் 11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பயணிகள் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்கனவே அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் அனுமதிக்கப்பட்ட அனைத்து மண்டலங்களிலும் நேற்று முதல் பஸ்களை இயக்க அரசு அனுமதி வழங்கியது. அதன்படி அரசு பஸ்களை முழுமையாக பராமரித்து கிருமி நாசினி தெளித்து தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இதேபோல் வேலூர் போக்குவரத்து மண்டலத்திலும் ஏற்பாடுகள் நடந்து வந்தது.இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பஸ் டெப்போக்களில் பஸ்கள் பராமரிப்பு பணி கடந்த சில நாட்களாக மேற்ெகாண்டு வந்தனர். மேலும் முக்கிய பஸ் நிலையங்களான வேலூர் பழைய பஸ் நிலையத்திலும், பெங்களூரு சாலையில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்திலும், புதிய பஸ் நிலையத்தில் செயல்படும் தற்காலிக பஸ் நிலையத்திலும், குடியாத்தம், பேரணாம்பட்டு உள்ளிட்ட பஸ் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நேற்றே மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.இதற்கிடையில் நேற்று அதிகாலை 5 மணி முதல் அரசு பஸ் டெப்போக்களில் இருந்து பஸ்களை பஸ் நிலையங்களுக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஊர்களுக்கு புறப்பட்டு சென்றது. காலை நேரத்தில் பயணிகள் கூட்டம் வெகு குறைவாக இருந்தது. பஸ் நிலையத்திலும் பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடியது. காலை 10 மணிக்கு பிறகுதான் பயணிகள் வருகை படிப்படியாக அதிகரித்து கூட்டம் அலைமோதியது. 49 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கியதால் வியாபாரிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.பஸ்களில் 50 சதவீதம் இருக்கைகளுடன் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பஸ்களில் பயணம் செய்ய முக கவசம் அணிந்து வந்த பயணிகளை மட்டுமே அனுமதித்தனர். மேலும் அவர்களுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதித்தனர். கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது.இதுகுறித்து போக்குவரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மே 10ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 49 நாட்கள் பஸ்கள் இயக்கப்படவில்லை. வேலூர் மாவட்டத்தில் நேற்று முதல் பஸ் போக்குரத்து ெதாடங்கி உள்ளது. எத்தனை பஸ்களை இயக்குவது என்பதை அந்தந்த மண்டல நிர்வாகங்களே சூழலுக்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலத்தில் 227 டவுன் பஸ்களை முழுமையாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புறநகர் பஸ்களை பொறுத்தவரை வேலூர் மண்டலத்தில் ஓடும் 384 பஸ்களில் 202 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில இடங்களுக்கு ெசல்லும் பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தால் அந்த பஸ்கள் ரத்து செய்யப்படும். பயணிகளின் வருகை பொறுத்து பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தடை விதிக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.கலெக்டர் ஆய்வு வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பிற ஊர்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் பயணம் செய்பவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் செல்கிறார்களா? பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்களில் கைப்பிடி மற்றும் இருக்கைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறதா? என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது போக்குவரத்து கழக பொது மேலாளர் நடராஜன், மாநகராட்சி கமிஷனர் சங்கரன் மற்றும் பலர் உடனிருந்தனர்….